சனிப்பெயர்ச்சி பூர்வாங்க பூஜை ஆராதனை விழா கவர்னர் பங்கேற்பு

0பார்த்தது
சனிப்பெயர்ச்சி பூர்வாங்க பூஜை ஆராதனை விழா கவர்னர் பங்கேற்பு
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் நளதீர்த்த ஆரத்தி மற்றும் சனிப்பெயர்ச்சி பூர்வாங்க பூஜை ஆராதனை விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டு ஆராதனையை தொடங்கி வைத்தார். அவர் தர்பானேஸ்வர் மற்றும் சனீஸ்வர பகவான் சன்னதிகளில் வழிபாடு செய்தார். தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் இஷிதா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி