தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (18/11/25) செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.