புதுவை: விஜிலன்ஸ் துறையில் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது

65பார்த்தது
புதுவை: விஜிலன்ஸ் துறையில் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது
மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதுச்சேரி அரசின் விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலராக இருந்தவர் கண்ணன். இவர் சென்ற மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவர் பணியில் இருந்தபோது ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக காப்பாற்றி உள்ளார். எனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். மேலும், அரசு காலம் தாழ்த்தாமல் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் பதவிக்கு திறமையான, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும். இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி