புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில், முதலமைச்சர் ரங்கசாமியின் உத்தரவின் பேரில், முத்தியால்பேட்டை தொகுதியில் சிறிய ரக பைபர் படகுகளான 50 படகுகளுக்கு ரேடார் கருவி வழங்கப்பட்டது. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம். எல். ஏ. வையாபுரி மணிகண்டன் இந்த கருவியை மீனவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.