புதுச்சேரியில் என்.ஆர்.
காங்கிரஸ் மற்றும்
பாஜக இடையே நிலவும் பனிப்போர் காரணமாக, அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீடு போன்ற முக்கிய நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன. கடந்த முறையைப் போலவே சபாநாயகர் பதவியை
பாஜக கேட்பதாகவும், ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி அதனை வழங்க மறுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாநிலத்தின் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.