புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசிய உளவாய்க்கால் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் ஏற்கனவே வில்லியனூர் காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலில் உள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து தவறாகப் பேசியதாக இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வில்லியனூர் காவல் துறையினர் சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.