புதுச்சேரியில் 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்காக ரூ.140 கோடி ஒதுக்கக் கோரப்பட்ட நிலையில், போதிய நிதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.