புதுச்சேரி பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் தொடர்ச்சியாக இறந்து விழுவதால் மக்களிடையே பறவை காய்ச்சல் குறித்த அச்சம் பரவியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைத்துறை அதிகாரிகள், உயிரிழந்த காகங்களின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே காகங்கள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும்.