புதுச்சேரி, முத்தியால் பேட்டை கால்வாயில் ஒருவர் விழுந்ததாக நேற்று (பிப்ரவரி 10) மாலை தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அவரை மீட்கச் சென்ற தீயணைப்பு வாகனம் எஸ்.வி.பட்டேல் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. அந்தக் கார் சாலையிலிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில் ஒரு பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.