நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று (மே 17) மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்குகின்றன. இந்தப் பணிகளில் சுமார் மூவாயிரம் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் எம். சுந்தரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.