புதுச்சேரியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, கெத்து காட்டுவதற்காக பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரது பாணியிலேயே அறிவுரை வழங்கினர். இதனால் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.