காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரை நகர் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்த மீனவர்களைக் கைது செய்துள்ள கடற்படை, அவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.