வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக புதுச்சேரியில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று பிற்பகலும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.