புதுச்சேரி தவளைக்குப்பம் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியரை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள். பள்ளிக்குள் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடினர்.
போலீசார் ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளியை மூட வேண்டும் எனக் கூறியும், ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி சிறுமியின் உறவினர்கள், மீனவ மக்கள் புதுச்சேரி கடலூர் நள்ளிரவு வரை மறியலில் ஈடுபட்டதால் புதுச்சேரி - கடலூர் சாலையில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.