காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக எம்எல்ஏ சாய் சரவணகுமார், புதுவை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமைச்சர்களை நியமிக்காமலும், துறைகளை ஒதுக்காமலும் இருப்பதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் உடனடியாக அமைச்சர்களை நியமித்து துறைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.