புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சி பகுதியில் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த சத்யராஜ் என்பவரின் ஃபயர் ஒர்க்ஸ் வெடி பொருட்கள் தயாரிக்கும் குடோன் நேற்றிரவு திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வெடி விபத்து ஏற்பட்டபோது குடோனில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.