புதுக்கோட்டை மாவட்டம் ஒத்தக்கடை அருகே இன்று வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் மின்கம்பி உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.