புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் நேற்று முருகானந்தம் (30) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஜேசிபி இயந்திரம் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தந்தை சிங்காரம் அளித்த புகாரின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.