புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத் திறனாளி பெண்ணை நேற்று 2 பேர் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் மழையூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.