புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சக்குடியைச் சேர்ந்த காத்தமுத்து (75) என்பவர் நேற்று கீழமஞ்சக்குடி கிளை சாலையை கடக்க முயன்றபோது, காரில் வந்த ரஞ்சித் குமார் (27) என்பவர் மோதியதில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.