புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த பெருங்காட்டில் இருந்து கூத்தங்குடிக்கு நேற்று பைக்கில் சென்ற அன்புசெல்வம் (53) என்பவர், பெருங்குடி சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.