புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகுகள் மே 20, 2026 அன்று சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த ஆய்வின்போது மீனவர்கள் தங்களது ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானியம் அட்டை, குடும்ப அட்டை, மற்றும் மீன்வளத்துறை வழங்கிய தொலை தொடர்பு சாதனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மீனவர்கள் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.