புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் அம்மாபட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் உயிரிழந்தார். அம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியவர் மாலையில் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.