பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த கதண்டு கூடு அழிப்பு!

0பார்த்தது
ஆவுடையார்கோவில் ஒன்றியம் கரூர் வட்டம் வெட்டிவயல் கண்மாய் அருகில் மாராயக்குடி மயான எல்லை சந்திக்கும் இடத்தில் பனை மரத்தின் அடியில் இருந்த மிகப்பெரிய கதண்டுகளின் கூடு, அப்பகுதி மாணவ மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. தகவல் கிடைத்தவுடன் களமிறங்கிய ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், கதண்டுகளை அழித்து பொதுமக்களுக்கு உதவினர். அவர்களின் இந்த உதவிக்கு பகுதி மக்களும் மாணவர்களும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

டேக்ஸ் :