கந்தர்வகோட்டை அடுத்த கணபதி புரத்தைச் சேர்ந்த ரிஸ்வானா (9) என்ற சிறுமி, வயலுக்குச் சென்றபோது தேள் கொட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.