புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே மழையூர் சாலையில் நேற்று வீரப்பன் (45) என்பவர் பைக்கில் சென்றபோது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி லதா அளித்த புகாரின் பேரில் மழையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.