புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் நாய்கள் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக போஸ் நகர், காந்திநகர் மற்றும் நகரப் பகுதிகளில், நாய்களுக்கு உணவு அளிக்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு பொதுமக்கள் உணவு அளித்து வருகின்றனர். இது பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.