புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தொட்டியில் இருந்து கடந்த 2 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இந்த தொட்டியில் இருந்து காமராஜபுரம், போஸ் நகர், காந்தி நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.