புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நேற்று மாரிமுத்து(35) என்பவர் குட்கா பொருள் விற்பனை செய்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8.100 கிலோ கிராம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.