புதுக்கோட்டை மாவட்டம் செம்மலப்பட்டியில் நேற்று, மோகனரங்கம் (42) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நகரக் காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.