புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, போஸ்நகர், காமராஜபுரம், பெரியார் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், அக்னி சட்டி, வேல் குத்தி வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.