புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்கேன் மையம் இன்று திறக்கப்பட்டது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இந்த புதிய மையத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், மருத்துவமனை உரிமையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர். இந்த புதிய தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.