முள்ளூரைச் சேர்ந்த சசிகுமார், ராஜா சத்தியசீலன் நேற்று (ஜனவரி 3) மாலை 7 மணிக்கு தனது பைக்கில் முள்ளூர் பஸ் ஸ்டாப் சாலையில் வரும்போது தஞ்சாவூரைச் சேர்ந்த தினேஷ் பாபு ஓட்டிவந்த Maxi cab வேன் இவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ராஜா சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த சசிகுமார் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.