புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு!

4பார்த்தது
புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் மற்றும் கள அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது நிரம்பிய, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04322-221220 என்ற எண்ணில் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.