புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அபிஷேக் குத்தா பணியாற்றி வந்த நிலையில், தமிழக அரசு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்ட ஏ.எஸ்.பி.யாக இருந்த ரவீந்திரகுமார் குப்தா, புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்.பி.யாக
பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை தனது பதவியேற்பை மேற்கொள்வார் என புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.