புதுகையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நடந்தது. இதில் ஆட்சித் தலைவர் அருணா, மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, புதுகை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மேயர் திலகவதி செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.