புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அருகே கோவில்பட்டி சாலையோரம் நேற்று பழனிச்சாமி(55) என்பவர் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். அவரது உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.