ஆசிரியை கொலை வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி!

தஞ்சை ஆலங்குடியில் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்மாபேட்டை அஜித்குமார் (வயது 28) சிறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறை காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
