புதுக்கோட்டை நகர மன்றத்திலிருந்து, தொமுச தொழிற்சங்க தலைவர் ரத்தினம் தலைமையில், CITU, AITUC, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புதிய தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து கண்டன பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் மத்திய அரசை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் கோரி 250-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டனர்.