புதுக்கோட்டை, பாலன்நகர் பெட்ரோல் பங்க் அருகே நேற்று லெக்ஷ்மணன் (22) என்பவர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.