புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேரூராட்சியில் உள்ள கலியபெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி மாத குருபெயர்ச்சியை முன்னிட்டு, இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.