புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சி குண்டாறு பகுதியில் பாண்டியன் (52) மற்றும் திருமேனி ஆகியோர் டிப்பர் லாரியில் மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. பனையப்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து அரை யூனிட் மணல் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.