
இலூப்பூர்: டாஸ்மாக் கடையில் தீ விபத்து!
இலுப்பூர், மேலப்பட்டி டாஸ்மாக் கடையின் காலி பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்து புகை வெளிவந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




























