புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாந்தளையைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (39), குடும்பச் சண்டை காரணமாக ஆறு மாதங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.