இலுப்பூர் இருந்திராப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு டிராக்டரில் மணல் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, இருந்திராப்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் (45) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.