இலுப்பூர் புறவழிச்சாலை வளையப்பட்டி பிரிவு சாலை அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தென்னரசு, பிலவேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்து இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.