புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த மேட்டுப்பட்டி பரம்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய ரெங்கராஜ் (29), விக்னேஷ் (23), மணிகண்டன் (25) ஆகிய மூவரை அன்னவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ. 300-யும் பறிமுதல் செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.