கூட்டணி கட்சியான காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று ராஜ்யசபாவிற்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர்
விஜய் இன்று (ஜூன் 3) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக தலைமையிலான புதிய அரசின் இந்த முடிவு,
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.