ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தரவைத்தோப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் தண்ணீர் தேங்கியது. பள்ளி மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில், மழை நீர் வடியாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.