ராமநாதபுரத்தில் வியாபாரம் செய்து வரும் சோலையப்பன் மற்றும் அவரது மகன் சோலை செல்வம், குலதெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்தினருடன் தும்முசினம்பட்டி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, பரளச்சி - கமுதி விலக்கு பகுதியில் எதிரே வந்த சொகுசு கார் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சோலைச் செல்வத்தின் தாய் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.